இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான தனிநபர் பிரேரணையை இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்துக்கு எடுக்கவும் - இம்தியாஸ்

Published By: Nanthini

12 Jan, 2023 | 07:46 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்காக என்னால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இரண்டாவது மதிப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனிநபர் பிரேரணையில் இருந்து உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்துக்கான அமைச்சின் பரிந்துரை மாத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களை இதன் பிரகாரம் திருத்துவதற்கான பரிந்துரைகளை அமைச்சு வழங்காததாலும், அதற்கான கால அவகாசம் ஜனவரி 14ஆம் திகதியுடன் முடிவடைவதாலும், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்காக என்னால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இரண்டாவது மதிப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

அத்துடன், இது தொடர்பான விவாதத்தை ஜனவரி 14ஆம் திகதிக்குப் பின்னர் வேறொரு நாளில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30
news-image

06 கோடியே 63 இலட்சம் ரூபா...

2025-01-20 15:55:37
news-image

அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள்...

2025-01-20 15:50:47
news-image

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக...

2025-01-20 15:44:31
news-image

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் வெடிப்புச்...

2025-01-20 15:22:49
news-image

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை...

2025-01-20 15:23:27