பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டர் மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொலிஸ் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.
தொலைக்காட்சிநிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கையில், பிரபல வர்த்தகரின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்குமாறு மறைகரமொன்று பொலிஸாருக்கும் விசாரணையில் ஈடுபட்டுள்ளவர்களிற்கும் இலஞ்சம் வழங்குகின்றது என தெரிவிக்கப்படுவதை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ நிராகரித்துள்ளார்.
உண்மையை மறைப்பதற்கு எவராவது முயன்றால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன பொலிஸார் மாத்திரம் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உண்மையை மறைப்பதற்காக பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை நாங்கள் நிராகரிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் நாங்கள் விசாரணைகளை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM