நடிகர் கலையரசன் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'வாழை' எனும் படத்தின் படப்பிடிப்பு முதற்கட்ட நிறைவடைந்தது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வாழை'. இதில் கலையரசன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் நடிகைகள் நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்திருக்கிறார். சிறார்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை நவ்வி ஸ்டூடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் திவ்யா மாரி செல்வராஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் வகையில் உருவாகி வரும் இந்த 'வாழை' எனும் படத்தின் பணிகள் கடந்த நவம்பரில் தொடங்கப்பட்டது. தற்போது தூத்துக்குடியில் நடைபெற்ற வந்த இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதால், விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மாமன்னன்’ எனும் படத்தின் இறுதி கட்டப் பணிகளிலும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM