(எம்.ஆர்.எம்.வசீம்)
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. பொதுஜன பெரமுன உட்பட அனைத்து கட்சிகளுடன் தற்போது கலந்துரையாடி வருகின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்துபோட்டியிட தீர்மானித்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பில் கட்சியின நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இடம்பெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது. என்றாலும் இந்த தேர்தலுக்கு முகம்கொடுப்பது தொடர்பாக நாங்கள் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் முகாமைத்துவ குழு ஏனைய கட்சிகளுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி வருகின்றது. அந்த வகையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கலந்துரைடி இருக்கின்றது. அதேபோன்று ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் தேர்தல் போட்டியிடுவது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர், தேரதலில் எவ்வாறு போட்டியிடுவது என நாங்கள் தீர்மானம் ஒன்றுக்கு வர இருக்கின்றோம். அந்த தீர்மானம் கட்சியின் செயற்குழுவில் விடப்பட்டு, செயற்குழு அனுமதி வழங்கிய பின்னரே ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்ற தீர்மானத்தை நாட்டுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் தெரிவிப்போம்.
என்றாலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஐக்கியமாக ஒன்றாக பயணிப்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM