ஜே.ஆரின் கொள்கையை ஜனாதிபதி ரணில் பின்பற்றுகிறார் -  நாலக கொடஹேவா

Published By: Vishnu

11 Jan, 2023 | 03:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தலை நடத்தாமல்,பலவந்தமான முறையில் அதிகாரத்தில் இருக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது அரச நிர்வாக அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கை ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தலை ஏற்கும் பணிகளில் இருந்து விலகுமாறு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சிமன்றங்கள்  மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சுற்றறிக்கைக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பதிலடி கொடுத்துள்ளது.ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு அமைய மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள், ஆகவே கட்டுப்பணம், வேட்புமனுக்கள் ஆகியவற்றை பொறுப்பேற்கும் நடவடிக்கையில்; அரச அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேர்தலை நடத்தாமல் பலவந்தமான முறையில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தார்,இறுதியில் விளைவு பாரதூரமாக அமைந்தது, ஜே.ஆர் ஜயவர்தனவின் கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார்,விளைவு பாரதூரமானதாக அமையும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு அரசாங்கம் கடும் அழுத்தம் பிரயோகிக்கிறது என்பது அரச நிர்வாகம். உள்நாட்டலுவல்கள். உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கை ஊடாக வெளிப்பட்டுள்ளது. தேர்தலை பிற்போட எவ்வழிகளிலும் இடமளிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47