பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நட்டஈடு பெற்றுக்கொள்ள தீர்மானம் - நீதியமைச்சர் விஜயதாஸ

Published By: Digital Desk 5

11 Jan, 2023 | 09:38 AM
image

(இராஜதுரை ஹஷான்)

எம்.வி.எக்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நட்டஈடு பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க துறைசார் குழுவின் அறிக்கையை சட்டமாதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி – எக்ஸ்பிரஸ் பேர்ல் சரக்கு கப்பலினால் சகல வழிமுறைகளிலும் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்வதற்கு நீதியமைச்சினால் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்ட குழுவினர் தமது ஆய்வு அறிக்கையை நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்தனர்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில்  40 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்ட இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு தமது இறுதி அறிக்கையை நீதியமைச்சரிடம் கையளித்துள்ளனர்.

பேராசிரியர் அஜித் த சில்வா மற்றும் பேராசிரியர் பிரசாந்தி குணவர்தன ஆகியோர் இந்த துறைசார் குழுவின் இணை தலைவர்களாக செயற்பட்டனர்.

தீ விபத்துக்கு உள்ளாகி கடலில் முழுமையாக மூழ்கிய இந்த கப்பலை அந்த இடத்தில் (கடலில்)இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கப்பலில் உள்ள கழிவு திரவங்கள் கடல் நீரில் முழுமையாக சேரும் அபாயம் காணப்படுகிறது.

அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈட்டை பெற்றுக்கொள்ள சர்வதேச சட்டத்தின் பிரகாரம் செயற்படவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு துறைசார் குழுவின் அறிக்கையை சட்டமாதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45