(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவரும் எதிர்பாராத வகையில் அமோக வெற்றி பெறுவோம். தேர்தல் இடம்பெறுமா என்ற சந்தேகத்தில் தான் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்.
வேட்பு மனுத்தாக்களின் பின்னர் தேர்தலை பிற்போட அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மேலவை இலங்கை கூட்டணி ஆகிய அரசியல் தரப்பினர்களுக்கு இடையில் திங்கட்கிழமை இரவு இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய கூட்டணி அமைப்பதற்கு விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்னும் ஓரிரு நாட்களுக்குள் உமது புதிய கூட்டணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். கூட்டணியில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து கூட்டணியாக செயல்பட தீர்மானித்துள்ளோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படுமா என்ற சந்தேகத்தில் தான் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். எவ்வழிகளிலாவது தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறது. அரசாங்கத்தில் முறையற்ற செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
தமது செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என குறிப்பிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுக்கு வழியில் தேர்தலை பிற்போட முயற்சிக்காமல் தேர்தலை முறையாக நடத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும். தமக்கான அரசியல் நிர்வாகத்தை தெரிவு செய்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM