உலகிலேயே திறமையான புலம்பெயர்ந்தோர் இந்தியாவில் உள்ளனர் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Published By: Nanthini

09 Jan, 2023 | 12:14 PM
image

(ஏ.என்.ஐ)

வெளிநாட்டில் வாழும் இந்திய சமூகம் உலகிலேயே மிகப்பெரிய, திறமையான புலம்பெயர் சமூகம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இந்தூரில் நடைபெற்றுவரும் இளைஞர் பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில் நேற்றைய தினம் (8) தொடக்க உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இந்திய சமூகத்தின் தனித்துவமானது, இந்தூர் நகரில் நடந்துவரும் பிரவாசி பாரதீய திவாஸ் போன்ற மாநாடுகளால் ஊக்குவிக்கப்படுகிறது. 

உலகிலேயே மிகவும் திறமையான புலம்பெயர்ந்தோர் இந்தியாவிலேயே உள்ளனர். மேலும், பலர் மிகவும் திறமையானவர்கள். ஆனால், வெளிநாட்டில் உள்ள இந்திய சமூகத்துக்கும் தாய்நாட்டுக்கும் இடையிலான பிணைப்பின் தீவிரம் எங்களின் தனித்துவமானது. 

தற்போது 17ஆவது பிரவாசி பாரதீய திவாஸ் மாநாடு நடைபெறுகிறது. புலம்பெயர்ந்தோர் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு நம்பகமான பங்காளிகளாக உள்ளனர். புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான இந்த உறவு மிகவும் முக்கியமானது.

இந்திய அரசாங்கம் வந்தே பாரத் மிஷன் மற்றும் தடுப்பூசி மைத்ரி முயற்சித் திட்டங்களை மேற்கொண்டது. அவை புலம்பெயர்ந்தோரை மையமாகக் கொண்ட திட்டங்களாகவும் அணுகப்பட்டன. 

எனவே, இன்று நாம் சந்திக்கும்போது, கொவிட் காலத்தில் நாங்கள் சந்தித்த அனைத்து சவால்கள் மற்றும் இன்னல்களின் விளைவாக, எமது பிணைப்புகள் இன்னும் வலுவாகிவிட்டன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஹென்றி...

2023-11-30 08:17:37
news-image

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொலை செய்ய...

2023-11-30 08:00:32
news-image

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக...

2023-11-29 17:34:11
news-image

சீனாவில் பரவும் நிமோனியா: மத்திய அரசு...

2023-11-29 15:11:25
news-image

பைடனை கைவிடுகின்றனர் அமெரிக்காவின் இளம் வாக்காளர்கள்...

2023-11-29 13:01:32
news-image

இஸ்ரேலிடமிருந்து கிடைக்கும் தகவல்களையும் சந்தேகத்துடன் அணுகுங்கள்...

2023-11-29 12:02:37
news-image

உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி...

2023-11-29 11:14:10
news-image

இந்தியாவில் உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியில்...

2023-11-29 11:40:54
news-image

இந்தியாவில் 17 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய...

2023-11-29 10:15:11
news-image

இந்தியாவின்உத்திரகாண்ட் சுரங்க விபத்து – முதற்கட்டமாக...

2023-11-28 20:45:45
news-image

நெருங்கியவர்கள் மூலமான பாலியல் வன்முறையில் தென்கிழக்கு...

2023-11-28 21:28:22
news-image

உத்தரகாண்ட் சுரங்கம்- 41 தொழிலாளர்களை அழைத்து...

2023-11-28 16:38:28