சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது - விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி கருத்து

19 Dec, 2016 | 11:49 AM
image

ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது என அவரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரியான ஜோன் நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

சதாம் ஹுசைனை விசாரணைக்குட்படுத்திய ஜோன் நிக்ஸன் எழுதியுள்ள Debriefing The President: The Interrogation Of Saddam Hussein எனும் நூலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சதாம் ஹுசைன் தன்னிடம்" அமெரிக்கா நினைப்பதை போன்று அரபு மொழியையும் எம்மக்களையும் புரிந்து செயற்பட முடியாது.

எமக்குள்ளே பல்வேறு கலாசார மற்றும் சமூக செயற்பாடுகள் அடங்கியுள்ளன. அதனை உள்ளூர் நபர்களை தவிர வெளிநாட்டவர்;களால் சரியான முறையில் பின்பற்ற முடியாது" எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஈராக்கிற்குள் பிளவுப்பட்டிருந்த பல்வேறு சமூகத்தினரை ஒன்று சேர்ப்பதில் அவர் வெற்றிக் கொண்டிருந்தார்.

எப்போதும் தனது நாட்டு மக்களின் நலனில் குறியாக இருந்த தலைவர் அவர். அவர் கட்டாயமாக தண்டிக்கப்பட்டிருக்க கூடாது.

மாறாக ஈராக்கிற்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என  ஜோன் நிக்ஸன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சதாம் ஹுசைனின் 2003 ஆம் ஆண்டு ஆட்சி காலப்பகுதியில் ஈராக்கில் அணுவாயுத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவினால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

ஈராக்கில் சதாதமின் ஆட்சி 2003 ஆம் ஆண்டு அங்கு அணுவாயுத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்காவால் கவிழ்க்கப்பட்டது. 

பின்னர் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

2025-02-05 09:43:19
news-image

காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ்...

2025-02-05 06:36:32
news-image

ஸ்வீடனில் கல்வி நிலையத்தில் துப்பாக்கிச் சூடு...

2025-02-05 03:14:15
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி...

2025-02-04 14:42:03