(எம்.மனோசித்ரா)
கண்டி - தெல்தெனிய பொலிஸ் பிரிவில் அம்பகோட்டை, கென்கல்ல பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவியொருவர் பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பாமல் காணாமல் போயுள்ளதாக , அவரின் உறவினர்களால் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டமைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி குறித்த மாணவி தனது பாடசாலை நண்பியொருவருடன் அன்றையதினம் பாடசாலைக்கு செல்லாமல் புகையிரதத்தின் ஊடாக கண்டியிலிருந்து கொழும்பிற்குச் சென்றுள்ளார். இதன்போது அதே புகையிரதத்தில் பயணித்த இளைஞன் ஒருவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்து கொண்டுள்ளார்.
பின்னர் குறித்த இளைஞன் இரு மாணவிகளினதும் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு, அவர்களை அழைத்துச் செல்லுமாறு குறிப்பிட்டுள்ளார். தாம் வரும் வரை அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பெற்றோர் இளைஞனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறு கொழும்பு - காலி முகத்திடலில் பெற்றோருக்காக காத்திருந்த சந்தர்ப்பத்திலேயே மாணவி அங்கிருந்து காணாமல் போயுள்ளார்.
எனினும் மற்றைய மாணவி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். காணாமல் போன 15 வயது மாணவி தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இவரை கண்டு பிடிப்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தின் 081-2374073 என்ற இலக்கத்திற்கும் , தெல்தெனிய பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அத்தியட்சகரின் 071-8591066 என்ற இலக்கத்திற்கும் அழைத்து தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM