இலங்கை அகதிகள் 38 பேர் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் இன்று (ஜன. 6) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர், தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவின் மங்களூரில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அகதிகளை விடுதலை செய்த நீதிமன்றம், அவர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
அவ்வாறு அகதிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டினை செய்வதற்காக 15 நாட்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும், தம்மை அனுப்புவதற்கான ஏற்பாட்டினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தே அகதிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் யாரிடம் தொடர்புகொண்டு பேசுவது என்பது தெரியாமல் பரிதவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஒரு விடுதியில் தாம் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு, மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும், சிலர் கடும் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ள அகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 26 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவருமாக 38 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தம்மை விடுவிக்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இதன்போது அகதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM