(செய்திப்பிரிவு)
பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்காக தன்னால் சமர்ப்பிக்கக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களை இதன் பிரகாரம் திருத்துவதற்கான பரிந்துரைகளை அமைச்சு வழங்காததாலும், அதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவடைவதாலும், இதுதொடர்பான விவாதத்தை 14 ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் நடத்துமாறும் இம்தியாஸ் பாக்கிர்மாக்கார் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனிநபர் பிரேரணையில் இருந்து உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்திற்கான அமைச்சின் பரிந்துரை மாத்திரம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாக்கிர் மாக்கார் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM