நியூயோர்க்கிலிருந்து டெல்லி நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் மீது ஆணொருவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் சர்ச்சையை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 26 ஆம் திகதி, அமெரிக்காவின் நியூயோர்க்கிலிருந்து இந்தியாவின் டெல்லி நகரை நோக்கி பறந்துகொண்டிருந்த எயார் இந்தியா விமானத்தின் வர்த்தக வகுப்பில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையிலிருந்த ஆண் பயணியொருவர், தனது காற்சட்டை ஸிப்பை திறந்துவிட்டு பெண்ணொருவர் மீது சிறுநீர் கழித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆண் பயணியை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மும்பையைச் சேர்ந்தவர் எனவும் எனினும், அவர் வேறு சில மாநிலங்களில் தங்கியிருக்ககூடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பயணி தனது விமானங்களில் பறப்பதற்கு 30 நாட்களுக்குத் தடை விதித்துள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேற்படி சம்பவம் குறித்து இந்திய சிவில் விமானப்போக்குவரத்துப் பணியகமும் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
பாரிஸ் - டெல்லி விமானத்திலும் பெண்ணின் போர்வையில் சிறுநீர் கழிப்பு சம்பவம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM