(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜெய் ஷா இன்று (05) தெரிவித்துள்ளார்.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் குழு ஏயில் இடம்பெற்றுள்ளதுடன், ஆசிய கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றில் வெற்றிப் பெறும் அணி குழு ஏயில் இடம்பெறவுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குழு பீயில் அங்கம் வகிக்கின்றன.
குழு நிலைப் போட்டிகளில் தத்தம் குழுக்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும். இரண்டாவது சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோதிக்கொள்ளவுள்ளதுடன், புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இப்போட்டித் தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பினும், பொதுவான நாடொன்றில் நடத்த உத்தேசித்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM