ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை செப்டெம்பரில் நடத்த திட்டம்

Published By: Digital Desk 5

05 Jan, 2023 | 02:56 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜெய் ஷா இன்று (05) தெரிவித்துள்ளார்.

இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள்  குழு ஏயில் இடம்பெற்றுள்ளதுடன், ஆசிய கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றில் வெற்றிப் பெறும் அணி குழு ஏயில் இடம்பெறவுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குழு பீயில் அங்கம் வகிக்கின்றன.

குழு நிலைப் போட்டிகளில் தத்தம் குழுக்களில் முதல் இரண்டு  இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும். இரண்டாவது சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோதிக்கொள்ளவுள்ளதுடன், புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள்  இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இப்போட்டித் தொடர் ‍பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பினும், பொதுவான நாடொன்றில் நடத்த உத்தேசித்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்...

2025-12-17 01:20:12
news-image

இலங்கை மகளிர் அணியில் இரண்டு கை...

2025-12-17 01:15:02
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை...

2025-12-17 01:10:43
news-image

பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய இலங்கை...

2025-12-16 19:07:35
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான...

2025-12-16 17:02:39
news-image

ஷார்ஜா வொரியர்ஸை வெற்றிப் பெறச் செய்தார்...

2025-12-16 14:42:13
news-image

ஆசிய இளையோர் பரா விளையாட்டில் இலங்கையின்...

2025-12-16 14:05:45
news-image

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் டி.எஸ்....

2025-12-16 09:52:29
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: நேபாளத்தை...

2025-12-16 03:17:32
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானை...

2025-12-15 22:01:55
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கும் வளங்ளைப் பயன்படுத்தி...

2025-12-15 17:30:09
news-image

மலேசியாவை வெற்றி கொண்டதன் மூலம் ஐக்கிய...

2025-12-15 13:29:22