சட்டக்கல்லூரி மாணவர்களின் ஆங்கில மொழி விவகாரம் குறித்த இறுதித் தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் - நீதி அமைச்சர்

05 Jan, 2023 | 02:48 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை எடுக்கப்பட்டுள்ளது.

இறுதி தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை (ஜன.05)பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற போது பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைத்த கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.

சட்டக்கல்லூரி மாணவர்கள்  தமது தாய்மொழியில் பரீட்சைக்கு தோற்றும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற தீர்மானம் பிரச்சனைக்குரியதாக உள்ளது.

ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்பித்தால் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வாக்களித்து அந்த தீர்மானத்தை இரத்து செய்ய முடியும். 

ஆனால் இதுவரை அந்த வர்த்தமானி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை, எடுக்கப்பட்டுள்ள தீர்மாhனத்தை அறிய தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார் .

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பில் சட்ட ஆய்வு கவுன்சிலிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.இறுதி தீர்மானம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

2025-02-09 17:02:16
news-image

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின்...

2025-02-09 17:20:22
news-image

களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானவரிடம்...

2025-02-09 17:15:32
news-image

ரயில் கடவையில் கவனமாக பயணிக்கவும்

2025-02-09 15:59:38
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் சந்தேக நபர் கைது...

2025-02-09 17:14:29
news-image

விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் இரு...

2025-02-09 15:40:24