பண்டாரவளையிலிருந்து உடுநுவர அந்தெஸ்ச பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மனித பாவனைக்கு உதவாத 2,621 கிலோகிராம் கழிவுத் தேயிலைகளை கம்பளை பிராந்தியத்திற்கு பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் தவுலகல கல்போர சந்தியில் வைத்து இன்று (05) அதிகாலை கைப்பற்றியுள்ளதுடன் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட மேற்படி கழிவுத்தேயிலை மனித பாவனைக்கு உதவாதது என சுற்றிவளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட நபர் கைப்பற்றப்பட்ட கழிவுத்தேயிலை கடத்தலுக்கு பயன்படுத்திய லொறியினையும் சட்ட நடவடிக்கைககளுக்காக தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையின் கட்டளையதிகாரி சட்டட்தரணி வருண ஜயசுந்தர பிராந்திய கட்டளை அதிகாரி நிசேத பெர்னாந்து ஆகியோரின் ஆலோசனைக்கமைய அதிரடிப் படையின் கம்பளை பிராந்திய உதவி கட்டளையிடும் அதிகாரி ரோசன வீதிய பண்டார தலைமையிலான அதிகாரிகளே மேற்படி சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM