கழிவுத் தேயிலையை கடத்த முயன்ற நபர் கைது

Published By: Digital Desk 3

05 Jan, 2023 | 12:23 PM
image

பண்டாரவளையிலிருந்து உடுநுவர அந்தெஸ்ச பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மனித பாவனைக்கு உதவாத 2,621 கிலோகிராம் கழிவுத் தேயிலைகளை கம்பளை பிராந்தியத்திற்கு பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் தவுலகல கல்போர சந்தியில் வைத்து இன்று (05) அதிகாலை கைப்பற்றியுள்ளதுடன் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட மேற்படி கழிவுத்தேயிலை மனித பாவனைக்கு உதவாதது என சுற்றிவளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட நபர் கைப்பற்றப்பட்ட  கழிவுத்தேயிலை கடத்தலுக்கு பயன்படுத்திய லொறியினையும் சட்ட நடவடிக்கைககளுக்காக தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையின் கட்டளையதிகாரி சட்டட்தரணி வருண ஜயசுந்தர பிராந்திய கட்டளை அதிகாரி நிசேத பெர்னாந்து ஆகியோரின் ஆலோசனைக்கமைய அதிரடிப் படையின் கம்பளை பிராந்திய உதவி கட்டளையிடும் அதிகாரி ரோசன வீதிய பண்டார தலைமையிலான அதிகாரிகளே மேற்படி சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப்...

2025-04-22 01:51:07
news-image

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...

2025-04-21 23:18:09
news-image

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

2025-04-21 23:10:54
news-image

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ...

2025-04-21 19:57:04
news-image

மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால்,...

2025-04-21 22:15:04
news-image

பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர்...

2025-04-21 15:48:26
news-image

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்...

2025-04-21 19:54:29
news-image

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் மறைவுக்கு...

2025-04-21 20:07:44
news-image

பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட...

2025-04-21 19:48:28
news-image

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார்...

2025-04-21 19:44:36
news-image

திருகோணமலையில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட...

2025-04-21 20:11:44
news-image

கிழக்கில்  அதிக வெப்பம் ! -...

2025-04-21 20:01:33