(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நயனாலொகம பிரதேசத்தில் லொறி துவிச்சக்கர வண்டி மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்த துவிச்சக்கர வண்டியை செலுத்தியவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர் 20 வயதுடைய திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார். விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு குருநாகல் பிரதான வீதியின் மாயோவத்த பிரதசத்தில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி உள்ளது. இந் நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 26 வயதுடைய திவுல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM