வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நகைகளும் பணமும் திருடப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (ஜன. 3) காலை இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர்களாக பணியாற்றும் கணவன், மனைவி இருவரும் பாடசாலைகளுக்குச் சென்ற நேரத்திலேயே இத்திருட்டு நடந்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பகல் வேளையில் வீட்டின் கூரை வழியாக உட்புகுந்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 45 பவுண்களுக்கு மேலான நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM