மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான உன்னி முகுந்தன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மாளிகப்புரம்' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஜெயராம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'மாளிகப்புரம்'. இதில் உன்னி முகுந்தன் கதையின் நாயகனாக நடிக்க, சம்பத் ராம் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்கள் தேவி நந்தா மற்றும் ஸ்ரீ பாத் நடித்திருக்கிறார்கள்.
கதாசிரியர் அபிலாஷ் பிள்ளை திரைக்கதை எழுத, விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரெஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.
சமூக பக்தி உணர்வை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை காவ்யா ஃபிலிம் கம்பனி எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரியா வேணு மற்றும் நீதா பின்ட்டூ ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதியன்று மலையாள மொழியில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு எதிர் வரும் ஆறாம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது.
சிறிய இடைவெளிக்குப் பிறகு சபரிமலை ஐயப்பனை பற்றிய சமூக பக்தி திரைப்படமாக உருவாகி இருக்கும் 'மாளிகப்புரம்' படத்திற்கு தமிழக ரசிகர்களும் பேராதரவு வழங்குவார்கள் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM