யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் யுவதியொருவரை 2 வருட காலமாக தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஜன.03) கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 17 வயதான பெண் (தற்போது 19 வயது) ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி, அதனை காணொளி பதிவுகளை எடுத்து, காணொளியை கட்டி மிரட்டி கடந்த இரண்டு வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்த நிலையில், குறித்த பெண் கடந்த வாரம் சுகயீனமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சையின் போது, பாலியல் துஷ்பிரயோககுட்படுத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்தமை தெரியவந்ததையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்து வந்த பருத்தித்துறை பொலிஸார், பொலிஸ் உத்தியோகஸ்தரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM