புதுவருட தினத்தில் இடம்பெற்ற பாற்சோறு, பலகார தாக்குதல் : கைதான நால்வருக்கும் பிணை

Published By: Digital Desk 2

03 Jan, 2023 | 06:02 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பேலியகொடையில் அமைந்துள்ள, ' மஹ நெகும ' பிரதான அலுவலகத்தில் அதன் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகியோர் மீது, பாற்சோறு மற்றும் பலகாரங்களால் நடாத்தப்பட்டதாக கூறப்படும்  தாக்குதல்கள் தொடர்பில் நால்வரை பேலியகொடை பொலிசார் கைதுச் செய்துள்ளனர். 

'மக நெகும' திட்டத்தின் ஊழியர்கள் நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன. 03)  அனுமதியளித்தது.

அதன்படி கைதான நால்வரின் 1, 4 ஆம் சந்தேக நபர்களை தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும், 2,3 ஆம் சந்தேக நபர்களை   தலா 3 இலட்சம் பெறுமதியான ஒரு சரீரப் பிணையிலும் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிவான்  கேமிந்த பெரேரா உத்தரவிட்டார்.

பெலி அத்த பகுதியைச் சேர்ந்த  கங்கானம்கே சுதர்ஷன குமார்,  சுனில் ஷாந்த , பாணந்துறையைச் சேர்ந்த  அஜித் பத்மகுமார, பூகொடையைச் சேர்ந்த  துஷார நுவன் ஷாமர ஆகியோரே  இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.

நேற்று  2 ஆம் திகதி, புது வருட சம்பிரதாயபூர்வ நிகழ்வுகள் பேலியகொடை - மக நெகும அலுவலகத்திலும் நடந்துள்ளது. இதன்போது மங்கள விளக்கேற்ற அத்திட்டத்தின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தயாரான போது, அவர்களது நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் அங்கிருந்த பலகாரங்கள், பாற்சோறு கொண்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இது தொடர்பில் முன் வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே பேலியகொடை பொலிசார் சந்தேக நபர்கள் நால்வரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகநீதி உலகரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 11:43:47
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10
news-image

செவ்வாயன்று இலங்கைக்கு மங்களகரமான செய்தி கிடைக்கும்...

2023-12-10 11:22:31
news-image

கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு...

2023-12-10 10:59:03
news-image

மஹாநாயக்க தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம்...

2023-12-09 21:05:21
news-image

தமிழரசின் தலைமைக்கு மும்முனையில் போட்டி

2023-12-09 20:44:27
news-image

முக்கிய சந்திப்புக்களை நடத்தும் உலகத் தமிழர்...

2023-12-09 20:54:30
news-image

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில்...

2023-12-10 09:52:53
news-image

கொழும்பில் இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்கும் சந்தோஷ்...

2023-12-10 11:32:10