'ஈகோ’வுக்கு இடம் கொடுக்காதீர்கள்!

Published By: Devika

03 Jan, 2023 | 03:58 PM
image

ணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்­தான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறு­பாடுகள் தோன்றலாம்.

அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்­கக் கூடாது. அது ‘ஈகோ’வுக்கு வழிவகுத்து­விடும். 

ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்­கொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும்.

அவர்­தான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோ­வுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசு­வது மனைவியை மனம்நோக செய்து­விடும்.

மற்ற சமயங்களில் அன்­பும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம். மற்றவர்கள் முன்னிலையில் துணை, தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டு­விடுவாரோ என்ற எண்ணம்­தான் ஈகோ­வுக்கு காரணமாக அமைந்து­விடுகிறது. 

எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்­களில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்­படுவதை கணவர் பார்க்கும்­போது அவருக்குள் தாழ்வு மனப்­பான்மை எட்­டிப்­பார்க்கும். தானும் சிறப்­பாக செயல்பட வேண்டும் என்ற உந்து­தலை­யும் ஏற்­படுத்தும். அதற்கான முயற்சி­களில் ஈடு­படு­வார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்­பாடுகளை ஊக்குவிக்க வேண்­டும். சிறப்பாக செயல்­படும்போது பாராட்ட வேண்டும். அதனைத்தான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்­புக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும். 

பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்­களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டு­வதும் ரொம்ப பிடிக்கும். அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்­தைகளை பேசுங்கள். அது அவ­ருக்கு பிடித்து போய்விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடு­வார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்­குள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்து­விடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்­வொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்­பார். அதனால் அதிகமாகவும் பாராட்டி­விடக்கூடாது. 

சில சமயங்களில் துணையின் செயல்­பாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்துக்கு ஆளாக நேர்ந்­தால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. ஈகோ கொண்ட கண­­வர்மார்களிடம் மன்னிப்பை எதிர்­பார்க்­கக்கூடாது. அவர்கள் செய்யும் தவறு­களை சுட்டிக்காட்டவும் தயங்கக்­கூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வ­தில் தவறில்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரியவைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்­களே தவறு­களை உணரும்போது மன்­னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டா­யப்படுத்தக்­கூடாது. எந்தவொரு காரியத்தை செய்வ ­தற்கு முன்பும் ஒருவருக்­கொருவர் கலந்தா­லோசித்து செயல்­படுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டு­விட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதை­யெல்லாம் அவரி­டம் கேட்க வேண்­டுமா?” என்ற எண்­ணம்தான் ஈகோ தோன்று­வதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்து­­கொண்டு செயல்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்