மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி ஹைராத் நகரில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
சனிக்கிழமை (டிச.31) மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு கல்முனை கடற்கரை பள்ளிவாயல் மௌலீது வைபத்திற்குச் சென்று விட்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.01) அதிகாலை 1.00 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவை உடைத்து பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (ஜன.02) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து இரண்டு கேஸ் சிலிண்டர்கள் ஒரு டெப் கணணி ஒரு கையடக்க தொலை பேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM