(எம்.மனோசித்ரா)
நேபாளம், காத்மண்டு நகரை மையமாகக் கொண்டு இயங்கும் சார்க் ஊடகவியலாளர்கள் பேரவையின் நிறைவேற்றுக்குழுவிற்கு 15 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய சார்க ஊடகவியலாளர்கள் பேரவை இலங்கைக்கான தலைவராக லசந்த டி சில்வாவும் , ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உப தலைவராகவும் , பிரியான் டி சில்வா பொது செயலாளராகவும் , ரிப்தி அலி செயலாளராகவும் , எஸ்.லியோ நிரோஷ தர்ஷன் பொருளாலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிறைவேற்றுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சஜித் ரணசிங்க , ரஷ்மிந்த குணரத்ன, தர்ஷன பண்டார, சதுரி முனசிங்க, சுமிதி தங்கராசா, ஆலோக பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சார்க் நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் அமைப்பான சார்க் ஊடகவியலாளர்கள் பேரவை அதன் 2023 ஆம் ஆண்டுக்கான கன்னி மாநாட்டை ஜனவரி மாதம் டெல்லியில் நடத்த முடிவு செய்துள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மாநாடு இடம்பெறும். நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சார்ந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM