கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விநாயகபுரத்தைச் சேர்ந்த தவக்குமார் சுரேஸ் என்ற 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞரின் வீட்டுக்குள் புகுந்த நபர்கள், அவரை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியும் உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை, அயலவர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM