மலர்ந்துள்ள புத்தாண்டில் “மலையகம்-200” என்பது பேசு பொருளாகப் பரிணமித்துள்ளது. இது ஒரு கொண்டாட்டம் அல்ல: மாறாக நாம் ஒவ்வொருவரும் எமது எதிர்கால வாழ்வாதாரம் பற்றி சிந்திக்க வேண்டிய விடயமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து நாடு சுபிட்சம் காண வேண்டும். அரசியல் ரீதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மலையகத்தைப் பொறுத்த வரையில் எமது மக்கள் இந்த நாட்டில் குடியேறி இருநூறு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் எமது சமூகம் வீடு, காணி முதலான சகல அடிப்படை உரிமைகளையும் பெற்று விடவில்லை. எமது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையிலேயே நாம் இருந்து வருகிறோம்.
எனவே, எமது எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அதற்கான வேலைத் திட்டத்தை முன்வைத்து அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்து உரிமைகளை வென்றெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM