பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து நாடு சுபீட்சம் காண வேண்டும் - புத்தாண்டுச் செய்தியில் திகாம்பரம்

31 Dec, 2022 | 07:18 PM
image

மலர்ந்துள்ள புத்தாண்டில் “மலையகம்-200” என்பது பேசு பொருளாகப் பரிணமித்துள்ளது. இது ஒரு கொண்டாட்டம் அல்ல: மாறாக நாம் ஒவ்வொருவரும் எமது எதிர்கால வாழ்வாதாரம் பற்றி சிந்திக்க வேண்டிய விடயமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும்  மகிழ்ச்சி  நிறைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து நாடு சுபிட்சம் காண வேண்டும். அரசியல் ரீதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மலையகத்தைப் பொறுத்த வரையில் எமது மக்கள் இந்த நாட்டில் குடியேறி இருநூறு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் எமது சமூகம் வீடு, காணி முதலான சகல அடிப்படை உரிமைகளையும் பெற்று விடவில்லை. எமது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையிலேயே நாம் இருந்து வருகிறோம். 

எனவே, எமது எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அதற்கான வேலைத் திட்டத்தை முன்வைத்து அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்து உரிமைகளை வென்றெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59