கடவத்தையில் உள்ள வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்காக பெண் ஒருவர் கொண்டு சென்ற 44 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் பஸ்ஸிலிருந்து இறங்கி வங்கிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்த நபரொருவர், அந்தப் பெண் சத்தம் போடாத வகையில், திடீரென ஒரு கையால் அவரது வாயை மூடி, தங்க நகைகள் அடங்கிய கைப்பையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் கணேமுல்லை பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில், கடவத்தை பகுதியில் உள்ள வங்கியொன்றின் பெட்டகத்தை முன்பதிவு செய்து, அந்த பெட்டகத்தில் தங்க நகைகளை வைப்பதற்காக அவர் சென்றபோதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM