(எம்.மனோசித்ரா)
அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாண்டு 4,000 ரூபாவுக்கு மேற்படாத விசேட முற்பணத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான சுற்று நிரூபம் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னேவினால் வெள்ளிக்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிரூபம் அமைச்சுக்களின் செயலாளர்கள் , மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இம்முற்பணக் கொடுப்பனவை நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்றும் , பெப்ரவரி 28 ஆம் திகதியின் பின்னர் இதனை செலுத்த முடியாது என்றும் குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு இதனை இவ்வாண்டுக்குள் அறிவிட்டு நிறைவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM