- தயாரிப்பு நிறுவனம் : விஏயு மீடியா என்டர்டெய்ன்மென்ட் & ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ்
- தயாரிப்பாளர்கள் : டி.வீரசக்தி & கே. சசிகுமார்
- நடிகர்கள் : சதீஷ், ரமேஷ் திலக், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தர்ஷா குப்தா இவர்களுடன் ஸன்னி லியோன்
- இயக்கம்: ஆர். யுவன்
- மதிப்பீடு : 2 / 5
ஆபாச பட நடிகையாக இருந்து கவர்ச்சி நடிகையாக உலா வரும் நடிகை சன்னி லியோன், கதையின் நாயகியாகவும், பேயாகவும் நடித்திருக்கும் திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. தமிழ் திரையுலகில் பேய் பட டிரென்ட் இருந்தது. அது தற்போது சென்டிமெண்ட் வித் எக்சனுக்கு மாறிவிட்டது. ஆனால் இளைய தலைமுறை ரசிகர்களின் கனவு கன்னியான சன்னி லியோனை வைத்து பேய் படத்தை வழங்கி இருக்கிறார்கள். சன்னி லியோன் பேயாக நடித்து ரசிகர்களை பயமுறுத்தினாரா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
தரக்குறைவான படங்களை இயக்குவதற்காக கதைகளை எழுதும் கதாசிரியர் வேடத்தில் நாயகன் சதீஷ் நடித்திருக்கிறார். இவருடைய அறை தோழராகவும், அவர் இயக்கும் படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணி புரியும் வேடத்தில் ரமேஷ் திலக் நடித்திருக்கிறார். தனியார் கிளினிக் ஒன்றில் வரவேற்பாளராகவும், சதீஷின் காதலியாகவும் நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார்.
தர்ஷா குப்தாவிற்கு அடிக்கடி பேய் கனவுகள் வருகிறது. தன் காதலரும், அவருடைய நண்பரும் பேயால் கொல்லப்படுவது போல் கனவு காண்கிறார். தன் காதலனையும், அவருடைய நண்பரையும் காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு செல்கிறார். அங்கு தர்ஷாவின் உடலுக்குள் ஆவி புகுந்து கொள்கிறது. அது 'அனகொண்டபுரம் போக வேண்டும்' என சொல்கிறது.
அனகொண்டபுரம்...!
திரைக்கதையின் தொடக்கத்தில் இந்த ஊரில் உள்ள மக்கள் இரவில் வெளியே வருவதில்லை. குறிப்பாக ஆண்கள் யாரும் வெளியே வருவதில்லை. அதையும் கடந்து வெளியே வரும் ஆண்களை, அப்பகுதியில் இருக்கும் அரண்மனையில் உள்ள ஆவி, பலி வாங்குகிறது.
அங்கு வருகை தரும் சாமியார் (மொட்டை ராஜேந்திரன்) ஒருவர், அந்த அரண்மனையில் இருக்கும் கெட்ட ஆத்மாவை சாந்தி அடைய வேண்டுமென்றால் சதீஷ் ஒருவரால் தான் முடியும் என சொல்கிறார்.
இந்நிலையில் அனகொண்டபுரத்திற்கு வரும் தர்ஷா குப்தா, சதீஷ், ரமேஷ் திலக் ஆகிய மூவரும் அங்குள்ள அரண்மனைக்குள் செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு என்ன நடந்தது? அங்குள்ள மர்மம் என்ன? தர்ஷா குப்தாவிற்குள் புகுந்த பேய்க்கும், அந்த அரண்மனைக்கும் என்ன சம்பந்தம்? சதீஷ்கும், அந்த ஆவிக்கும் என்ன தொடர்பு..? இதுபோன்ற சுவாரசியமான கேள்விகளுடனான கதை தான் 'ஓ மை கோஸ்ட்'.
'நாய் சேகர்' எனும் படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் முன்னணி நகைச்சுவை நடிகர் சதீஷ், இந்த திரைப்படத்திலும் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் திரைக்கதையின் முழு பாரத்தையும் சுமக்க முடியாமல், அதனை தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அவர் பேசும் வசனங்களில் ‘அரை இன்ச்’ புன்னகை வந்தால் அதிசயம். சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் வருவதும்.. அதற்கான ரசிகர்கள் சிரிப்பதும் கேட்க முடிகிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் திரையில் தோன்றிய பிறகாவது... திரைக்கதை வேகமெடுக்கும் என்று எதிர்பார்த்தால்.. புஸ்ஸ்ஸ்.
கதையில் முக்கிய திருப்புமுனையான தர்ஷா குப்தாவின் உடலுக்குள் புகுந்து கொள்ளும் ஆவிக்கும், அவருக்கும் என்ன தொடர்பு என்பது இயக்குநருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
விஜய் டிவி கே பி ஒய் பாலா பேய் ஓட்டுபவராக வருகிறார். அவரது காட்சிகள் துண்டு துண்டாக இருப்பதால், தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. பேய் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்றாலும்.., அபத்தமான காட்சிகள் அதிகம் என்பதால், பார்வையாளர்களை சோர்வடைய வைக்கிறது.
சன்னி லியோனின் தந்தை பெண் பித்தனாக கட்டப்படுகிறார். தன்னை சீராட்டி பாராட்டி வளர்த்த ஆயாவை தந்தையே நாசம் செய்வதால், அவரை கொலை செய்யும் அளவிற்கு சன்னி லியோன் துணிகிறார். ஆண்கள் என்றாலே வெறுக்கும் சன்னி லியோனுக்கு சதீஷ் மீது காதல் வருகிறது. இதற்கு இயக்குநர் சொல்லி இருக்கும் லாஜிக் சிரிப்பை வரவழைக்கிறது.
யோகி பாபு படத்தின் இரண்டாம் பாதியில் வருகிறார். உடல் மொழியாலோ, வசன உச்சரிப்பாலோ.. பார்வையாளர்களிடத்தில் சிரிப்பை வரவழைக்க கடும் முயற்சி செய்கிறார். ஆனால் சிரிப்பு தான் வரவில்லை.
பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும் சன்னி லியோனின் கவர்ச்சி மட்டுமே ரசிகர்களுக்கு இதம் தருகிறது.
அகில இந்திய அளவிற்கு ரசிகர்களை கொண்டிருக்கும் சன்னி லியோனை, லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்திருக்கும் படக்குழுவினர், அவரை வைத்து ரசிகர்களை மிரட்டும் வகையில் ஒரு உச்சகட்ட காட்சியையாவது அமைத்திருக்கலாம். ஆனால் என்ன நினைத்தார்களோ..! சாதாரணமான கிளைமாக்சுடன் படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.
ஓ மை கோஸ்ட் : டைம் வேஸ்ட்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM