- தயாரிப்பு நிறுவனம் : 18 ரீல்ஸ்
- தயாரிப்பாளர் : எஸ். பி. சௌத்ரி
- நடிகர்கள் : ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், அபிஷேக் குமார் மற்றும் பலர்
- இயக்கம் : கிங்ஸ்லின்
- மதிப்பீடு : 2.5/5
- கதை - தந்தையை கொன்றவர்களை சூழ்ச்சி செய்து பழி வாங்கும் நாயகியின் கதை.
வாடகை வாகனத்தை இயக்கும் சாரதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். தந்தையை இழந்து நோயாளியான அம்மாவுடன் வாழ்க்கையை நகர்த்தி செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்பத்தின் மூத்த வாரிசான ஐஸ்வர்யா ராஜேஷ், மறைந்த தந்தை செய்த தொழிலை , அவரைத் தொடர்ந்து இவர் மேற்கொள்கிறார்.
ஒருமுறை இவருடைய வாகனத்தில் அரசியல்வாதி ஒருவரை கொல்லும் நோக்கத்தில் கூலிப்படை ஒன்று பயணிக்கிறது. அவர்களிடமிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா? அவர்கள் கொல்ல நினைத்த அரசியல்வாதியை கொன்றார்களா? என்ன நடந்தது? என்பதே படத்தின் விறுவிறு திரைக்கதை.
முதல் பாதி மெதுவான திரைக்கதையுடன் நகர.. இரண்டாம் பாதியில் சற்று விறுவிறுப்பு அதிகரிக்கிறது. படத்தின் உச்சகட்ட காட்சி.. யாரும் எதிர்பாராத திருப்பமாக இருந்தாலும், ஏராளமான கேள்விகளை பார்வையாளர்களிடத்தில் எழுப்புகிறது.
சாரதியான ஐஸ்வர்யா ராஜேசின் தந்தை, தேர்தல் அரசியலில் ஈடுபட., அதை விரும்பாத வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தும் மூத்த அரசியல்வாதி ஒருவர், ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையை கொன்றுவிடுகிறார். இதற்காக அவரும், அவரது இளைய சகோதரரும் திட்டமிட்டு, கூலிப்படையில் இணைந்து, அந்த அரசியல்வாதியை பழி வாங்குகிறார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய தோள் மீது இப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதையையும் அனாயசமாக சுமந்து, தன்னுடைய அனுபவிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை ஈர்க்கிறார்.
வாழ்க்கையில் எந்த உயரத்திற்கு சென்றாலும், எப்போதும் தேவை அன்புதான் என்பதை அழுத்தமாக வலியுறுத்திருக்கும் இந்த டிரைவர் ஜமுனா திரைப்படம், குறைந்த சதவீதத்திலான ரசிகர்களுக்கு பிடிக்கும்.
நெடுஞ்சாலை பயணம் ..வாகன பயணம்... வாரிசு அரசியல்.. கூலிப்படை. என இயக்குநரின் திரைக்கதைக்கு ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பக்கபலமாக தோள் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கும் இசைக்கலைஞர் ஒருவர், இந்த பயணத்தில் இணைகிறார். ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் தருகிறார். இவரின் நடிப்பும் பரவாயில்லை.
டிரைவர் ஜமுனா - திரில் டிரிப்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM