கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் கடந்த 27, 28ஆம் திகதிகளில் அநுராதபுர நகரில் உள்ள பாடசாலைகளில் நடத்தப்பட்டன.
இதில் பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீத போட்டிகள், பரதநாட்டிய போட்டிகள் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கான போட்டிகள் இடம்பெற்றன.
அந்த வகையில் கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அநு/ சுவர்ணபாலி பாலிகா மகா வித்தியாலயத்தில் கர்நாடக சங்கீத போட்டிகளும், அநு/ஸாஹிரா கல்லூரியில் முஸ்லிம் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளும் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து 28ஆம் திகதி புதன்கிழமை அநு/சுவர்ணபாலி பாலிகா மகா வித்தியாலயத்தில் பரதநாட்டிய போட்டிகள் நடத்தப்பட்டன. அதை தவிர, அமைச்சின் அழகியற் கிளையின் ஏற்பாட்டில் கதக் போட்டிகளும் இடம்பெற்றன.
கதக், பரதநாட்டிய போட்டியில் நு/நல்லிளை பாற்றி மகளிர் பாடசாலைக்கு முதலிடம்
தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட சங்கீத மற்றும் பரதநாட்டிய போட்டியில் புத்தாக்க நடனப் பிரிவில் நுவரெலியா நல்லிளை பாற்றி மகளிர் பாடசாலையை சேர்ந்த தரம் 12 கலைப்பிரிவு மாணவி செல்வி. நிரோஷி முதலாமிடத்தை பெற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.
அத்துடன் போட்டியில் நபிஷா மற்றும் தனுஷியா ஆகிய மாணவிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றியீட்டிய மாணவியை ஆசிரியர்களான திருமதி.சுரோக்கா, எஸ்.பீ.சேகர், வி.நலுஜா, நதிஷா ஆகியோர் பயிற்றுவித்தனர்.
நு/நல்லிளை பாற்றி மகளிர் பாடசாலையின் சார்பாக பங்குபற்றிய மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களின் அயராத உழைப்பையும் அர்ப்பணிப்பையும், கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. கணேசராஜா, வலயக்கல்வி பணிப்பாளர்களான திரு. லசந்த மற்றும் திரு. மோகன்ராஜ், பாடசாலை அதிபர் திருமதி. ஜெயலக்ஷ்மி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.
மேலும், கடந்த பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதில் நு/நல்லிளை பாற்றி மகளிர் பாடசாலை முன்னிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சங்கீதம் மற்றும் பரதநாட்டிய போட்டிகளில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கு முதலிடம்
அகில இலங்கை கர்நாடக இசைப் பாடல் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர் குழுவினர் முதலாமிடத்தை பெற்றுள்ளனர்.
அத்துடன் பரதநாட்டிய போட்டி நிகழ்ச்சியில் அக்கல்லூரி மாணவன் செல்வன். மோகனதாஸ் கிசோன் முதலாமிடத்தை பெற்று சாதித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM