30 ஆயிரத்துக்கும் அதிக அரசாங்க ஊழியர்கள் ஓய்வு - அரசாங்கம்

Published By: Vishnu

29 Dec, 2022 | 07:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்று செலகின்றனர்.

இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என பொது நிர்வாக,மாகாண சபைகள், உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

60 வயது பூரணமான அதிகமான அரச ஊழியர்கள் ஒரே தடவையில் ஓய்வுபெற்றுச் செல்வதால் அந்த வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்று செலகின்றனர். இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

எவ்வாறெனினும்  ஒரே தடவையில் இந்தளவு அதிக எண்ணிக்கையிலான அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெற்று செல்வதால் அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் இடம்பெறாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை கடந்த அரசாங்கம் 65 என அறிவித்த போதும் தற்போதைய அரசாங்கம் அந்த வயதெல்லையை 60 ஆக அறிவித்துள்ள நிலையிலேயே இந்த வருடம் 31 ஆம் திகதியுடன் 30,000ற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.

கடந்த வருடத்தில் ஓய்வு பெற வேண்டிய  அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்லாமை காரணமாகவே இந்த வருடம் அரச ஊழியர்கள் இந்தளவு அதிக எண்ணிக்கையில் ஓய்வுபெற்றுச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44