எமக்கானவற்றை நாமே உற்பத்தி செய்வோம் - வவுனியாவில் ஓர் விவசாயப் புரட்சி

Published By: Vishnu

29 Dec, 2022 | 08:09 PM
image

இன்று நம் நாடு பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் கிராமபுறங்களில் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வை இழந்துவருகின்றனர்.

மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கு அரசாலும் அரசசார்பற்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களினாலும் பல வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை உரியவாறு மக்களை சென்றடைவதில்லை என்பதுடன் அத் திட்டங்கள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.

இருப்பினும் ஒரு சில நிறுவனங்களின் செயற்பாடு இன்றளவும் மக்கள் மத்தியில் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் Via Village Entrepreneur’s Centre என்ற அமைப்பு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல வேலை திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன் அவை உரியவாறு பயனாளிகளை சென்றடைந்து அப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது. 

இவ் அமைப்பானது வறுமைகோட்டின் கீழ் வாழும் கிராம மக்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கை பிரதான இலக்காக கொண்டு கடந்த பத்துவருடங்களாக மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

இன்றைய பொருளாதார சிக்கலான காலகட்டத்தில் எமது உணவுத் தேவையை பூர்தி செய்தல் மிகவும் சவாலானதாக இருக்கின்றது. இவ்வாறான சவாலான பொருளாதார நெருக்கடிகள் பஞ்சம் பட்டினி என்பன ஏற்படும் காலங்களில் இவற்றை சமாளிக்க வீட்டுத் தோட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் அவை தொடர்பான விழிப்புணர்வுகளை இவ் அமைப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருவதுடன் வீட்டுத்தோட்டங்களிற்கிடையிலான போட்டிகளை அறிவித்து அவற்றுக்கு பரிசு தொகைகளையும் அறிவித்துள்ளனர்.  

இதன் மூலம் பலர் வீட்டுத்தோட்டங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதுடன் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி பலர் செல்வதற்கு வழி வகுக்கின்றது. தமக்கு தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்வதுடன் நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்து மக்கள் பயன்படுத்துவதால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியுமென இவ் அமைப்பின் வவுனியா மாவட்ட உத்தியோகத்தர் தெரிவித்தார்.  

வீட்டுத்தோட்டம் என்பது வீட்டின் வளவில் தோட்டம் செய்து பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கும் அயலாருடன் பகிர்வதற்கும் மேலதிக விளைச்சலை விற்பனை செய்வதும் வீட்டுத் தோட்டத்தின் வரைவிலக்கணமாகும்.   

எமது நாடு மட்டுன்றி வளர்ந்த நாடுகளிலும் வீட்டுத் தோட்டம் என்ற விடயம் மிக முக்கிய விடயமாக காணப்படுகின்றது. நாம் சந்தைகளுக்கும் கடைகளுக்கும் அலைந்து திரிந்து அதிக விலை கொடுத்து தரமில்லா காய்கறிகளை வாங்குகின்றோம். இதனை தடுப்பதற்கு வீட்டுத் தோட்டம் முக்கியமானதொன்று என இவ் அமைப்பு வெளிப்படுத்தி வருவதுடன் அதை செயற்பாட்டளவிலும் செய்து காட்டிவருகின்றது. 

ஒரு மனிதனிற்கு அவன் இயங்குவதற்கு தேவையான சக்திகளை உருவாக்கும் சத்துக்களையும், கனியுப்புக்களையும் வாரி வழங்குவதில் தாவரவழி உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் கிழங்குவகைகள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன.

உணவு இல்லையேல் மனிதனில்லை எனும் நிலையில், அவ்வுணவை மனிதர்களிற்கு அள்ளித்தருவதில் முதன்மையான இடத்தை வகிப்பது விவசாயம் என்ற விடயத்தை மக்களிடம் கொண்டு சென்ற பெருமை Via Village Entrepreneur’s Centre என்ற அமைப்பையே சாரும் என்பதுடன் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிற்கு முன்மாதிரியாக செயற்படும் இவ் அமைப்பின் செயற்பாடு பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசியக்...

2023-03-26 20:43:26
news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26