புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் நாசம் - விவசாயிகள் கவலை

Published By: Digital Desk 2

29 Dec, 2022 | 02:47 PM
image

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பழைய எலுவாங்குளம் பகுதியில் இம்முறை சுமார்  600 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாயம் நேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் குறித்த பகுதியில் உட்புகுந்து விவசாய நிலங்களை துவம்சம் செய்துவருவதாக அக்கிராம விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர். 

குறித்த பகுதியில் முறையான மின்சார வேலிகள் இல்லாமையின் காரணத்தினாலே குறித்த காட்டு யானைகள் விவசாயக் கிராமத்தில் உற்புகுவதாக இதன்போது விவசாயிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் கூறியும் அதிகாரிகள் அசமந்தபோக்காக செயற்படுவதாக அக்கிராம விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 

தாம் நுன்கடன்களைப் பெற்றும் தங்க நகைகளை அடகு வைத்தும் உரப் பிரச்சனை மற்றும் எரிபொருள் பிரசானைகளுக்கு மத்தியில் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் காட்டு யானைகளின் தொல்லைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த கிராம மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவணத்தில் கொண்டு குறித்த பகுதிக்கு யானை வேலியை அமைத்துத் தருமாறும்  குறித்த காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்டித் தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25