நம் முன்னோர்கள் தண்ணீர் சேமித்து வைப்பதற்கு செப்பு பாத்திரங்களையே பயன்படுத்தினார்கள். சமையலுக்கும், உணவு பரிமாறுவதற்கும் செப்பு பாத்திரங்களின் பங்களிப்பு அதிகம் இருந்தது.
செப்பு பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பயன்படுத்தியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதற்கு தண்ணீரை வடிகட்டும் தன்மை உண்டு. தண்ணீரில் இருக்கும் நச்சுக்களை நீக்கி தாதுக்களின் மதிப்பை அதிகரிக்கவும் செய்யும்.
நவீன யுகத்துக்கு ஏற்ப ப்ளாஸ்டிக் போத்தல்களுக்கு மாற்றாக செப்பு போத்தல்கள் புழக்கத்துக்கு வந்திருக்கின்றன. செப்பு போத்தலில் நீர் நிரப்பி பருகுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்ப்போம்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
பெரும்பாலானோர் அசிடிட்டி, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய பிரச்சினைகளால் பாதிப்படையும் குடல் இயக்கத்தை சீராக்க செப்பு உதவும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் செப்பு பாத்திரத்தில் சேமித்து வைத்திருக்கும் நீரை பருகி வருவதன் மூலம் ஓரிரு வாரங்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்.
நச்சுக்களை நீக்கும்:
அடிக்கடி வெளி உணவுகளை சாப்பிடுபவர்களாக இருந்தால், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவது மிகவும் முக்கியமானது. செப்பு போத்தல் நீரை பருகுவது நச்சுகளின் தீய விளைவுகளை குறைப்பது மட்டுமின்றி எடை அதிகரிப்பையும் தடுக்கும். உடலில் சேரும் நச்சுப்பொருட்களையும் எளிதில் வெளியேற்றும். இரத்தத்தையும் சுத்தப்படுத்திவிடும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
செப்பு பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும். புதிய செல்கள் உற்பத்திக்கும் செப்பு பாத்திர நீர் உதவும். எனவே, வழக்கமான தண்ணீர் போத்தலுக்கு மாற்றாக செப்பு போத்தலை பயன்படுத்துவது நல்லது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM