இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் ஐம்பத்தேழாம் கட்டமானது. 2022.12.28 இன்று கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள அவரது மக்கள் தொடர்பகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இக்கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 76 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிலையில், வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த செயற்றிட்டமானது ரவிகரனால் கடந்த 17.05.2014 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த ஐம்பத்தேழாம் கட்டத்துடன் இதுவரையில் 3,338 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
மேலும் புலம்பெயர் நாட்டில் வசிக்கும் செந்தூர்ச்செல்வன், உமா, பமிசன் குடும்பத்தினர் ஐயப்பன் விரதத்தினை முன்னிட்டு இக்கட்டத்திற்குரிய நிதி உதவியினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM