(இராஜதுரை ஹஷான்)
தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக உயர்நீதிமன்றத்திற்கு வழங்கிய வாக்குறுதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பாதுகாக்கும் என நம்புகிறோம்.
ஜனவரி மாதம் 4ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமாயின் பெப்ரவரி 25 முதல் மார்ச் 11 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலத்தில் புதன்கிழமை (டிச. 28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இம்மாத இறுதியில் வெளியிடுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 8 ஆம் திகதி குறிப்பிட்டது,ஆனால் இதுவரை எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. ஆனால் ஜனவரி மாதம் 04ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளார்கள்.
தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு வாக்குறுதி வழங்கியது,
இந்த வாக்குறுதியை ஆணைக்குழு பாதுகாக்கும் என எதிர்பார்க்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு ரிட் மனுக்கல் எதிர்வரும் மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் மாதம் (ஜனவரி) 09 ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும்.தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 14 அல்லது 17 நாட்களுக்குள் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு 5 முதல் 7 வார காலத்திற்குள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும்.
தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM