வியட்நாம் தடுப்பு முகாமில் இருந்து விசேட விமான மூலம் இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்த 151 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள சிஐடியினர் பின்னர் அவர்களை விடுதலை செய்வார்கள் என பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 8 ஆம் திகதி மியான்மாரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கனடாவுக்கு படகில் சென்றபோது படகு கடலில் மூழ்கும் நிலையில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர் .இவர்களில் 151 பேர் மீண்டும் இலங்கை திரும்ப விரும்பம் தெரிவித்தனர்
இதனையடுத்து சர்வதேச புலம்பெயர்அமைப்பின் அனுசரணையுடன் இன்று (28) புதன்கிழமை மியான்மாரின் விசேட விமான மூலம் 142 ஆண்கள் 9 பெண்கள் உட்பட 151 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தினை இன்று அதிகாலை 3 மணியளவில் வந்தடைந்தனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்கள் வவுனியா கொழும்பு யாழ்ப்பாணம் உள்ளிட்டபகுதிகளை சேர்ந்த
சட்டவிரோத ஆள்கடத்தல் முகவர்கள் ஊடாக 3 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் டொலர்களை வழங்கி இங்கிருந்து விமான மூலம் மியான்மாருக்கு சட்டபூர்வமாக சென்றடைந்துள்ளதாவும்.
பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக பயணித்துள்ளதாக சிஜடி யினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணையின் பின்னர் அவர்கள் வீடுகளிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM