முல்லைத்தீவு - கள்ளப்பாடு தெற்கில், நெய்தல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் நேற்று 27.12.2022 இன்று மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
உதவுங்கரங்கள் அமைப்பின் நிர்வாகி தி.தியாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு, விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமானது.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், மாற்றுத்திறனாளிகளுடைய கலை நிகழ்வுகள், விருந்தினர்களது உரை என்பன இடம்பெற்றன.
அதனையடுத்து நெய்தல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள், மற்றும் உதவுதொகைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவ மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் திருமதி. உமாமகள் மணிவண்ணன், முல்லைத்தீவு மாவட்ட சமுகசேவைகள் உத்தியோகத்தர் ந.தசரதராஜகுமாரன், கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் சு.கரிகாலன், கள்ளப்பாடு வடக்கு கிராம உத்தியோகத்தர் ஸ்ரீ.கௌசல்யா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சு.வினோதினி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான செய்யது காசிம் முகம்மது ஜௌசி, ந.சுஜீவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், கிராமமட்ட பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும், கிராமமட்ட விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM