யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் திருவெம்பாவை விரதம் முன்னெடுப்பு

Published By: Ponmalar

28 Dec, 2022 | 12:33 PM
image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில்  மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் இன்றைய தினம் திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய  முன்றலில் இருந்து ஆரம்பமாகும் திருவெம்பாவை பாராயணம் பல்கலைக்கழகத்தினூடாக கலட்டி  சந்தியினை அடைந்து, பாலசிங்கம் விடுதியினூடாக தபால் பெட்டி சந்தியினை அடைந்து, பரமேஸ்வரா சக்தியினை அடைந்து, மீண்டும் பரமேஸ்வரா முன்றலில் பாராயணம் முடிவுற்றது.

இதன்பொழுது குறித்த பகுதிகளில் உள்ள ஆலயங்களையும் தரிசித்த வண்ணம் பாராயணம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக பத்து நாட்களும் மாணவர்களால் பாராயணம் முன்னெடுக்கப்பட்டு இறுதி நாள் மாணிக்கவாசகர் எழுந்தருளி திருவெம்பாவை முற்றுபெறவுள்ளது.

மேலும் எதிர்வரும் ஐந்தாம் திகதி திருவெம்பாவையை  முன்னிட்டு மார்கழி விழாவும் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீரடி சாயி இராஜகோபுர வருடாந்த உற்சவம்

2023-03-29 21:23:02
news-image

மன்னாரில் இளம் இசை, வாத்திய கலைஞர்களுக்கான...

2023-03-29 21:20:52
news-image

பெண்களை வலுப்படுத்துவதற்காக மாபெரும் வர்த்தகக் கண்காட்சி

2023-03-29 15:11:54
news-image

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற உலக நீர்...

2023-03-29 14:37:58
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-03-29 15:10:11
news-image

சுதுமலை தெற்கு வேம்படி ஸ்ரீ ஞானவைரவர்...

2023-03-29 12:04:10
news-image

சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின்...

2023-03-29 11:11:42
news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02