(என். வீ. ஏ.)
இலங்கைக்கு எதிராக புதுவருடத்தில் நடைபெறவுள்ள இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்ககளை முன்னிட்டு இந்தியாவின் இருபது கிரிக்கெட் 20 அணிக்கு ஹார்திக் பாண்டியாவும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மாவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருபது 20 அணியின் உதவித் தலைவராக சூரியகுமார் யாதவ்வும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் உதவித் தலைவராக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிரடி துடுப்பாட்ட விக்கெட் காப்பாளர் ரிஷாப் பன்டுக்கு இரண்டு அணிகளிலும் இடம் வழங்கப்படாததுடன் பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் தலைவராக விளையாடிய ஷிக்கர் தவான் கருத்தில் கொள்ளப்படவில்லை.
விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகிய இருவரும் இருபது 20 குழாத்தில் இடம்பெறாதபோதிலும் ஒருநாள் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இருபது 20 குழாத்தில் விக்கெட் காப்பாளராக அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷான் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலான வீரர்கள் 25க்கும் குறைவான போட்டிகளில் பங்குபற்றியவர்களாவர். அத்துடன் 4 வீரர்கள் முதல் தடவையாக இந்தியாவின் இருபது 20 குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
ஷுப்மான் கில், ராகுல் திருப்பதி, ஷிவம் மவி, முக்கேஷ் குமார் ஆகியோர் முதல் தடவையாக இருபது 20 குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது கிரிக்கெட் தொடர் வான்கடே (ஜனவரி 1), பூனே (ஜனவரி 5), ராஜ்கோட் (ஜனவரி 7) ஆகிய மைதானங்களில் நடைபெறும்.
3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் குவாஹாட்டி (ஜனவரி 10), ஈடன் கார்ட்ன்ஸ் (ஜனவரி 12), திருவனந்தபுரம் (ஜனவரி 15) ஆகிய மைதானங்களில் நடைபெறும்.
இந்தியாவின் இருபது 20 கிரிக்கெட் குழாம்: ஹார்திக் பாண்டியா (தலைவர்), இஷான் கிஷான், ருத்துராஜ் கய்க்வாட், ஷுப்மான் கில், சூரியகுமார் யாதவ் (உதவித் தலைவர்), தீப்பக் ஹூடா, ராகுல் திருப்பதி, சஞ்சு சம்சன், வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்த்ர சஹால், அக்ஸார் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் பட்டேல், உம்ரன் மாலிக், ஷிவம் மவி, முக்கேஷ் குமார்.
இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் குழாம்: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா (உதவித் தலைவர்), வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்த்ர சஹால், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ், உம்ரன் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM