(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சிற்கும், பொது நிர்வாக அமைச்சிற்கும் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த எம்.எம்.பி.கே. மாயதுன்னே, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த எச்.கே.டி.டபிள்யு.எம்.என்.பி.ஹப்புஹின்னே , பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை கல்வி அமைச்சின் செயலாளராக மீண்டும் எம்.என்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக யு.டி.சி.ஜயலால் மற்றும் நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக வசந்த பெரேரா ஆகியோர் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சின் செயலாளராக எம். யமுனா பெரேரா , முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக எம்.எம்.நஜிமுதீன், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.டபிள்யு.எஸ்.சமரதிவாகர ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM