வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாடலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய ஒளிவிழா நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், புனித பேதுரு பாவிலு ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி J.B அன்ரனிதாஸ் இறையாசி வழங்கியிருந்தார்.
ஒளிவிழா நிகழ்வில் யேசு கிறிஸ்துவின் பாடல்கள், யேசு கிறிஸ்துவின் பிறப்பு நாடகம், பரதநாட்டியம், நாட்டார் கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் வடக்கு மாகாண பிரதம செயளாலர் இ.வரதீஸ்வரன், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயளாலருமான யசோதரா உதயகேமார், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச உதவி செய்ளாலர் நேசகுமார் செல்வரட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்ததனர்.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஜனனம் அறக்கட்டளை முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் முகுந்தகஜன் 135 மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளை அன்பளிப்பாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM