புத்தளம், பாலாவி சமுர்த்தி வங்கிக் கிளைக்குள் நுழைந்த சிலர் அங்கு காணப்பட்ட பாரிய பெட்டகத்தை எடுத்துச் செல்ல முற்பட்டபோதும் அதனைக் கொண்டு செல்ல முடியாமல் வீதிக்கு அருகில் உள்ள வடிகானில் போட்டு விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 26ஆம் திகதி சமுர்த்தி வங்கியின் அதிகாரி ஒருவர் வங்கிக் கிளைக்கு வந்தபோது, வங்கிக்கு உரித்தான பெரிய பெட்டகம் வடிகானில் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி சமுர்த்தி வங்கி அலுவலகம் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த 24ஆம் திகதி அல்லது 25ஆம் திகதி இரவு வங்கிக் கிளைக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாய்க்கு அருகில் உள்ள வங்கிக் கட்டிடம் அமைந்துள்ள காணிக்குள் நுழைந்தே வங்கிக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமுர்த்தி உறுப்பினர்களின் தினசரி பணம் மற்றும் முக்கிய கடிதங்கள் அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வளவு பணம் உள்ளது என்பதை கூற முடியாது எனவும் சமுர்த்தி வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM