மழைக்கால டிப்ஸ்..!

Published By: Ponmalar

27 Dec, 2022 | 12:21 PM
image

* மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால், காய்கறிகள் மற்றும் பழங்களைப் பாதுகாக்க ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கெடாமல் பாதுகாக்க முடியும்.

* காய்கறிகள்,  பழங்களின் மேல் படரக் கூடிய சில பூஞ்சைகளைத் தடுக்க 3 பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு வினிகர் கலந்து அதில் பழங்கள், காய்கறிகளை கழுவி, துணியால் துடைத்தெடுத்து உலர வைக்கலாம். வினிகருக்கு பூஞ்சை உருவாகுவதையும், அழுகுவதையும் தடுக்கும் தன்மையுள்ளது.

* புதினா, கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, துளசி போன்ற செடிகளின் தண்டுப் பகுதியை நீரில் முழ்கும்படி வைப்பதால்,  அவை வாடிப்போவதைத் தவிர்க்கலாம். 

* காய்கறிகள், பழங்களைத் தனித்தனியாக  வைக்கவும்.

* கத்தரிக்காய், வெண்டிக்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளைப் புதியதாக வாங்குவதோடு, முடிந்தவரை விரைவில் சமைக்க வேண்டும். அவற்றை அடுத்த நாளுக்குப் பயன்படுத்த விரும்பினால், பிளாஸ்டிக் பை அல்லது பேப்பரில் சுற்றி, பிரிட்ஜில் வைக்கவும். பேப்பரில் வைத்தால் அதிகப்படியான ஈரப்பதம் உறிஞ்சப்படும்.

* உருளைக்கிழங்கு,  வெங்காயம் முளைப்பதைத் தடுக்க குளிர்ந்த,  உலர்ந்த இடத்தில் வைக்கவும். இவற்றை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஏனெனில் இவை அதிக அளவில் நீர்கோர்க்க செய்வதோடு, அவற்றின் சுவையும் மாறும்.

* பொதுவாக கீரைகளில் அதிக அளவில் நீர், மண், சேறு இருக்கும். எனவே அவை விரைவில் அழுகிவிடும். எனவே அவற்றை சுத்தம் செய்து பேப்பரில் சுற்றி வைப்பதன் மூலம் வைத்து பயன்படுத்தலாம்.

* கதவு, ஜன்னல்களை காலையில் திறக்காதீர்கள். ஏனெனில் பனிக்காலத்தில் மகரந்த சேர்க்கையின் பரவல் அதிகம் இருப்பதால் தொற்றுகள் அதிகம் பரவும்.

* பச்சை வெங்காயத்தில் ஒவ்வாமையை விரட்ட கூடிய ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. உணவு எடுத்து கொள்ளும்போது சில துண்டுகள் பச்சையாக எடுத்து கொண்டால் அலர்ஜியிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

* சளி உடலில் உறைவதை முற்றிலும் தவிர்க்கவும். குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்வது அவசியம். இதற்கு தேநீரில் அடிக்கடி ஏலக்காய், லவங்கம், அதிமதுரம் ஆகியவற்றை கலந்து குடித்தால் சளி கட்டுக்குள் இருப்பதுடன் உடல் வெப்பநிலையும் சீராகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right