4 மாவட்டங்களைச் சேர்ந்த 1,675 பேர் சீரற்ற காலநிலையால் பாதிப்பு, 109 வீடுகள் சேதம்

Published By: T. Saranya

26 Dec, 2022 | 05:06 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த இரு தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600 க்கும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய மாத்தளை, கண்டி, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் 387 குடும்பங்களைச் சேர்ந்த 1,675 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , ஒரு வீடு முற்றாகவும் 109 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்தமை காரணமாக 53 குடும்பங்களைச் சேர்ந்த 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கண்டி மாவட்டத்திலேயே அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் கடும் மழை மற்றும் மரம் முறிந்து விழுந்தமை காரணமாக 322 குடும்பங்களைச் சேர்ந்த 1,367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு இரு மரணங்கள் பதிவாகியுள்ளதோடு மூவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு ஒரு வீடு முழுமையாகவும் , 35 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் கடும் காற்று மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே வேளை பதுளையில் கடும் காற்று மற்றும் மரம் முறிந்து விழுந்தமை காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் படிப்படியாக இலங்கையின் கடற்பகுதியை கடந்து செல்வதால் , கடந்த இரு தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் மழையுடனான காலநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் மாத்திரம் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04