பொருளாதார நெருக்கடிமிக்கதான காலகட்டத்தில் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் இறைமகன் இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பு விடுதலையாக அமைய வேண்டுமென்று பிரார்த்திப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் விடுத்துள்ள 'கிறிஸ்மஸ்' வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதபவது,
பாவத்திலும் அடிமைத்தனத்திலும் வாழும் மக்கள் விடுதலையடைய வேண்டும். ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெற வேண்டும். அனைத்து மக்களும் இவ்வுலகில் ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வாழவேண்டுமென்பது இயேசு பாலனின் பிறப்பின் தத்துவமாகும். இப்பிறப்பின் மகத்துவத்தை கிறிஸ்மஸ் தினத்துடன் அர்த்தமுள்ளதாக்குவோம்.
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடம் கிறிஸ்மஸ் தினம் களைகட்டவில்லை. இம்முறை பொருளாதார நெருக்கடி மேலோங்கியுள்ளது.
காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டவர்கள் என்கிறது சத்திய வேதம். அவ்வகையில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு இம்முறை 'கிறிஸ்மஸ்' விடுதலையின் செய்தியை வழங்குமென்று எதிர்பார்ப்போம்.
இக்கிறிஸ்மஸ் பண்டிகை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்குமான பொதுப் பண்டிகையாக இருந்து வருகின்றமையினால் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM