1970களில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பலரை, குறிப்பாக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கொலை செய்ததாக குற்றச்சுமத்தப்பட்ட தொடர்கொலையாளி சார்ள்ஸ் சோப்ராஜ் (78), நேபாள சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.
இந்திய தந்தைக்கும், வியட்நாமிய தாய்க்கும் மகனாக பிறந்த சார்ள்ஸ் சோப்ராஜ், பிரெஞ்சு பிரஜையாவார்.
1970களில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் 20 இற்கும் அதிகமானோரின் கொலை தொடர்பில் சார்ள்ஸ் சோப்ராஜ்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவற்றில் 14 கொலைகள் தாய்லாந்தில் இடம்பெற்றன. பிகினி கில்லர் (bikini killer) சேர்ப்பன்ட் (Serpent)) ஆகிய பட்டப்பெயர்களும் சார்ள்ஸ் சோப்ராஜுக்கு உள்ளன,
1976 முதல் 1997 வரை இந்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையிலிருந்து விடுதலையான பின்னர் அவர் பிரான்ஸுக்கு சென்றார். 2003 ஆம் ஆண்டு அவர் நேபாளத்துக்குத் திரும்பிய நிலையில் நேபாள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
1975ஆம் ஆண்டு இரு வெளிநாட்டவர்களை கொலை செய்தமை தொடர்பான வழக்கில் சார்ள்ஸ் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2004 ஆம் ஆண்டு நேபாள நீதின்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 78 வயதான சார்ள்ஸ் சோப்ராஜை ஆரோக்கிய பாதிப்புகள் காரணமாக சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு நேற்று முன்தினம் நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், இன்று வெள்ளிக்கிழமை நேபாள சிறையிலிருந்து சார்ள்ஸ் சோப்ராஜ் விடுவிக்கப்பட்டார். 2 அவர் பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM