சென்னையில் நடைபெற்ற 20 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது நடிகை சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் அனுசரணையுடன் இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 22 ஆம் திகதி வரை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தமிழ் படப் பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பட தொகுப்பாளர், சிறந்த ஒலிக் கலவையாளர்... உள்ளிட்ட பல பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த ஒளிப்பதிவாளர் எனும் விருது, 'இரவின் நிழல்' படத்தில் பணியாற்றியதற்காக ஆர்தர் வில்சனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகராக 'மாமனிதன்' எனும் திரைப்படத்தில் நடித்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் இந்த விருதினை 'கிடா: எனும் படத்தில் நடித்த மறைந்த நடிகர் பூ ராமு என்பவருடன் இணைந்து பெற்றிருக்கிறார். சிறந்த நடிகையாக 'கார்கி' எனும் படத்தில் நடித்ததற்காக நடிகை சாய் பல்லவி தெரிவு செய்யப்பட்டு, அவருக்கு சான்றிதழ், கோப்பை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது.
சிறந்த படம் சிறப்பு பரிசாக 'ஆதார்' எனும் திரைப்படமும், சிறந்த ஒலிக்கலவையாளராக 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தில் பணியாற்றிய அந்தோணி பிஜே ரூபன் அவர்களுக்கும், சிறந்த படத்தொகுப்பாளராக 'பிகினிங்' எனும் திரைப்படத்தில் பணியாற்றியதற்காக சி. எஸ். பிரேம்குமாருக்கும், சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசை 'கசடதபற' எனும் திரைப்படத்திற்கும், சிறந்த படத்திற்கான முதல் பரிசு 'கிடா' எனும் திரைப்படத்திற்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM