ஒருசில அரச சேவையாளர்கள் உக்ரேன்- ரஷ்யா போன்று செயற்படுகிறார்கள் - நுவரெலியாவில் ஜனாதிபதி

Published By: Digital Desk 2

22 Dec, 2022 | 04:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல அரச நிறுவனங்களையும் ஒருமுகப்படுத்தி தயாரிக்கப்படும் அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பான அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அனுமதி பத்திரங்கள் அனைத்தையும் இரத்து செய்து மக்களுக்கு தேவையான காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

ஒருசில அரச சேவையாளர்கள் உக்ரைன் -ரஷ்யா போன்று செயற்படுகிறார்கள்.மக்களுக்கான சேவையை இழுபறி நிலையில் முன்னெடுக்காமல் பொறுப்புடன் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

நுவரெலியா மாவட்ட செயலக பிரிவில் வியாழக்கிழமை (டிச. 22) இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் என்னிடம் (ஜனாதிபதி) முன்வைத்துள்ள பல்வேறு பிரச்சினைகளில் 50 சதவீதமானவற்றை அரச சேவையாளர்களினால் தீர்க்க முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி,அமைச்சர் ஆகியோர் கொழும்பில் இருந்து ஒவ்வொரு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது,அரச நிறுவனங்கள் விரிவுப்படுத்தப்பட்ட தொடர்புகள் ஊடபக மக்கள் சேவையை சிறந்த முறையில் தொடர முடியும் என்றார்.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல அரச நிறுவனங்களையும் ஒருமுகப்படுத்தி தயாரிக்கப்படும் அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு அனுப்பி வைக்கமாறு ஜனாதிபதி பொறுப்பான அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அவ்வாறு அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் தனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.

நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலா சேவைத்துறையை விரிவுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. உலக முடிவை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்காக பட்டிபொல முதல் பொரலந்த வரையான பகுதியில் கேபிள் கார் செயற்திட்டத்தை ஆரம்பிக்க உரிய நடவடிக்கைளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். அரசுக்கு சொந்தமான காணி தொடர்பில் மாவட்ட செயலகம், பெருந்தோட்டத்துறை அமைச்சு, காணி பதிவு திணைக்களம் ஆகியவற்றை ஒன்றிணைந்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கமாறு பணிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00